நடிகர்கள் :
சமுத்திரகனி
ஹரி
இனியா
மகேஸ்வரி
இயக்குனர் :பிரான்க்லின் ஜேக்கப்
ரைட்டர் தங்கராஜ்( சமுத்திரகனி) என்னும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் படம் முழுக்க நம் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு முறையும் தங்கராஜ் என்று யாராவது கூப்பிடும் பொழுது (சமுத்திரகனி) தங்கராஜ் திரும்பிப் பார்ப்பதும், புருவத்தை உயர்த்தும் பொழுதும், பயந்து கொள்வதும், தயங்குவதும், மேல் அதிகாரிகளுக்கு அடிபணிவதும், அத்தனையும் சரிவர செய்து ஒரு ரைட்டர்யுடைய கடமை என்ன? எப்படிப்பட்ட வாழ்நாள் தொழில் அது என்று நம் மனதில் மிகவும் ஆழமான பல கேள்விகளை எழ செய்கிறது இந்த தங்கராஜ் கதாபாத்திரம்.
சில பல காட்சிகள் மட்டுமே வந்தாலும் சரண்யா வாக நடித்திருக்கும் நடிகை இனியா மிக முக்கியமான ரோல் செய்திருக்கிறார். தான் குதிரை ஓட்டுவதும் அதன்பின் குதிரையுடன் சரண்யா கதாபாத்திரத்தையும் அடக்க முயற்சி செய்வதும், அதிலிருந்து திரைக்கதையில் ஏற்படும் பல டிவிஸ்டுகள் நம்மை மேலும் மேலும் வசியப்படுத்தும்.படத்தின் கேமரா ஒர்க் , இசை, கலை மற்றும் எடிட்டிங் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காட்சிக்கு காட்சி மிகவும் சுவாரசிய படுத்துகிறது.
0 Comments