MAHAAN (TAMIL) MOVIE REVIEW


விக்ரம், துருவ் விக்ரம்,சிம்ரன், பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மகான் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

படத்தின் கதை 1968ல் இருந்து பயணிக்கிறது. ஆடுகளம் நரேன் சாராயக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். தனது மகன் விக்ரமை காந்தி போல ஒரு மகானாக வளர்க்கவேண்டும் என விரும்புகிறார். ஆனால் விக்ரம் சிறு வயது நண்பர்களுடன் சேர்ந்து குடி, சூதாட்டம் என திரிகிறார். விக்ரம், பாபி சிம்ஹா இருவரும் தமிழ் நாட்டில் மது வியாபாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக விக்ரமின் மனைவி மற்றும் மகன் விக்ரமை விட்டு பிரிகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து காவல் அதிகாரியாக வரும் துருவ் விக்ரமிற்கும், விக்ரமிற்கும் நடக்கும் மோதலில் யார் வென்றார்கள் என்பதுதான் படத்தின் கதையாகும்.

படத்தில் விக்ரமிற்கு சற்று வித்யாசமான பாத்திரம் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக படத்தின் இறுதிக்கட்டத்தில் தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் விக்ரமின் நடிப்பு அமைந்தது படத்திற்கு கூடுதல் பலமாகும். இந்நிலையில் கடந்த படத்தில் விட்டதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் பிடித்திருக்கிறார்.

ஒருபக்கம் ஆக்க்ஷன், இன்னொரு பக்கம் செண்டிமெண்ட், காதல் என அனைத்தையும் கலந்து ஒரு சிறந்த கமர்ஷியல் விருந்தை ரசிகர்களுக்கு படைத்து மேலும் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை இப்படம் எடுத்துரைக்கிறது.

Post a Comment

0 Comments